வியாழன், 15 ஏப்ரல், 2010

சோதிடமும் நானும் 4

சோதிடமும் நானும் 4
முன்பெல்லாம் சோதிடம் பற்றி அவ்வளவாக நூல்கள் வந்ததில்லை ஆனால் இப்போதோ வள வள வென்று ஏகப்பட்ட நூல்கள்.

அதில் முக்கால்வாசி எழுதப்படும் நோக்கம் தனக்கு தெரிந்தவற்றையும் பல நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டும் , மொழி பெயர்க்கப்பட்டும், வியாபார நோக்கில் எழுதப்படுபவையாகவே இருக்கின்றது.

ஒரு சிலர் மட்டுமே நல்ல எண்ணத்தில் பிறருக்கு பயன் தரும் வகையில் தெளிவாக எழுதுகின்றனர்.அவர்களில் மறைந்த திரு பி.எஸ்.பி அவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளார்.

மேலும் திரு மு . மாதேஸ்வரன் அவர்களும் நல்ல முறையில் சிறந்த புத்தகங்களை தந்திருக்கிறார். சோதிட திரட்டு மூன்று பகுதிகள், முகூர்த்த தரங்கினி, திசாபுத்திபலன் கள் குறித்து 12 நூல் கள் பெரிய அளவில் ஒவ்வொரு லக்னத்தில்
பிறந்தவர்களுக்கும் முறையே ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்க்கும் தெளிவாக கூறி இருக்கின்றார்.
நான் மிகவும் ரசித்துப் படித்த இன்னொரு புத்தகத்தின் ஆசிரியர். விகே சவுத்திரிV.K.CHOUDHRY
ஆவார்..
அவர் நிறைய மூல நூல்களை படித்து ஆராய்ச்சி செய்து, 28 வருடங்களுக்குப் பிறகு அனுபவமும் கலந்து தந்திருக்கின்றார்.

கலந்து காலத்திற்குத் தக்கபடி களைய வேன்டியதை யெல்லாம் களைந்து எழுதியிருக்கிறார் ஜோதிடத்தை நன்றாக முறையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இவரது
புத்தகங்கள் வாங்கி பயனடையலாம். . ஆனால் எனக்கென்னவோ படித்த வுடன்
மறந்து விடுவதால் {கஜினி சூர்யா போல்} எனக்கெல்லாம் கேபி முறைதான்
ஒத்துவருகின்றது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக